ஐ பி எல் கிரிக்கெட் போட்டிகளுக்கு பேருந்துகளில் சலுகை பயணம் இல்லை

ஐ பி எல் கிரிக்கெட் போட்டிகளுக்கு பேருந்துகளில் சலுகை பயணம் இல்லை
வரும் மே 24 மற்றும் 26 நாட்களில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளுக்கு மாநகரப் பேருந்துகளில் சலுகை பயணம் அனுமதி இல்லை மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
ஐபிஎல் -2024 கிரிக்கெட் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகள் வரும் மே 24 மற்றும் 26 ஆகிய நாட்களில் சென்னை, MA சிதம்பரம் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. முந்தைய கிரிக்கெட் போட்டிகளில் IPL போட்டிக்கான Online/pre-printed டிக்கெட் வைத்திருந்தால், அந்த டிக்கெட்டுகளை காண்பித்து மாநகரப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், வரும் மே 24 மற்றும் 26 நாட்களில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளுக்கு மாநகரப் பேருந்துகளில் சலுகை பயணம் அனுமதி இல்லை. எனவே பயணிகள் பயண கட்டணம் செலுத்தி பயணச்சீட்டு பெற்று பயணம் செய்யுமாறு மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Tags

Next Story