பொதுத்தேர்வுகள் முடியும் வரை மின்தடை கூடாது -அமைச்சர் தங்கம் தென்னரசு

பொதுத்தேர்வுகள் முடியும் வரை மின்தடை கூடாது -அமைச்சர் தங்கம் தென்னரசு

பொதுத்தேர்வுகள் முடியும் வரை மின்தடை கூடாது என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தியுள்ளார். 

பொதுத்தேர்வுகள் முடியும் வரை மின்தடை கூடாது என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை அலுவலகத்தில் எதிர்வரும் கோடை காலத்தின் போது தமிழ்நாடு முழுவதும் சீரான மின்சார விநியோகம் வழங்குவது குறித்து அனைத்து தலைமை பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வை பொறியாளர்களுடன் காணொளி காட்சி வாயிலாக மின்சாரம், நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கி உள்ள நிலையில் தேர்வு காலம் முடியும் வரை தமிழ்நாடு முழுவதும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புக்கான மின் நிறுத்தம் ஏதும் மேற்கொள்ள வேண்டாம் என மின்சாரம், நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமை பொறியாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கி உள்ளார்.

மின் பகிர்மான வட்டங்களில் 30 நிமிடங்களுக்கு மேல் மின்தடங்கல் ஏற்பட்ட நிகழ்வுகள் குறித்தும் அதற்கான காரணங்கள் குறித்தும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் சிறப்பு கவனம் செலுத்தி அதற்கான காரணத்தை கண்டறிந்து உடனடியாக சரி செய்வதற்கும் அமைச்சர் உத்தரவு பிறப்பித்தார்.

Tags

Next Story