இந்தியாவில் மூன்றாவது பெரிய கட்சி திமுக - அமைச்சர் அன்பில் மகேஷ்

இந்தியாவில் மூன்றாவது பெரிய கட்சி திமுக - அமைச்சர் அன்பில் மகேஷ்

 அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

இந்தியாவில் மூன்றாவது பெரிய கட்சியாக திராவிட முன்னேற்ற கழகம் இருக்கிறது. மாநில கட்சியாக இருக்கும் போதே பாஜகவிற்கு குடைச்சல் தருகிறோம் என்றால் தேசிய கட்சியாக மாறிவிட்டால் என்ன ஆகும் என்று நினைத்து பாருங்கள் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தெற்கு மாவட்டம் சைதை மேற்கு பகுதி 140வது வட்ட திமுக சார்பில் 5071 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் எ.வ வேலு ,மா சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பிரதமர் நம் தலைவர்களை பற்றி, தொடர்ந்து பேசி வருவதை வழக்கமாக வைத்துக் கொண்டுள்ளார். பிரதமர் அடிக்கடி தமிழகம் வருகிறார்,புயலுக்கு வராத பிரதமர்,வெள்ள பாதிப்புகளுக்கு வராத பிரதமர், நாடாளுமன்ற கேள்வி நேரத்திற்கு வராத பிரதமர், தமிழகத்தில் பல்வேறு பிரச்சனைகளுக்கு வராத பிரதமர் தற்போது தமிழகம் வருகிறார் என்றால் அவருக்கு பயம் வந்து விட்டது. இந்தியாவில் எந்த மாநிலத்தில் சென்றாலும் திமுகவை பற்றியே பேசுகிறார் மோடி, திமுகவிற்கு பிரச்சாரம் செய்து எங்களின் வேலையை குறைத்து விட்டார்.

அண்ணா, கலைஞர், முதலமைச்சர் மு க ஸ்டாலின், மதிப்பிற்குரிய அமைச்சர் உதயநிதியை பார்த்தால் கூட அவர்களுக்கு பயம் வந்துவிட்டது. இந்தியாவில் மூன்றாவது பெரிய கட்சியாக திராவிட முன்னேற்ற கழகம் இருக்கிறது. மாநில கட்சியாக இருக்கும் பொழுதே தங்களுக்கு குடைச்சல் தருகிறோம் என்றால் தேசிய கட்சியாக மாறிவிட்டால் என்ன ஆகும் என்று நினைத்து பாருங்கள் என்று பேசினார்.

Tags

Next Story