சுந்தரேஸ்வரர் சுவாமி கோவிலில் திருக்கல்யாண வைபவம்

சுந்தரேஸ்வரர் சுவாமி கோவிலில் திருக்கல்யாண வைபவம்

திருக்கல்யாணம் 

வேலூர் மாவட்டம், குடியாத்தம் சுந்தரேஸ்வரர் சுவாமி கோவிலில் திருக்கல்யாணத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் மீனாட்சி அம்மன் நகரில் அமைந்துள்ள மீனாட்சி அம்மன் சமேத சுந்தரேஸ்வரர் சுவாமி கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும் நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு திருமாங்கல்யம் பிரசாதமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து ஏராளமான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மீனாட்சி அம்மன் கோவில் தர்மகர்த்தா பி.ஹேமச்சந்திரன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக வழக்கறிஞர் கே.எம்.பூபதி, ஓய்வுபெற்ற துணை கலெக்டர் எம்.கஜேந்திரன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கமலவேணி லிங்கசாரதி, ஏ.பிரபாகரன் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவை சேர்ந்த எம்.ஆர்.சீனிவாசன், ஏ.ராஜசேகர், எம்.கோபால், ஜி.ஆர்.ரவி, டி.கே.இளங்கோ உள்பட மீனாட்சி அம்மன் சமேத சுந்தரேஸ்வரர் சுவாமி திருக்கல்யாணம் மற்றும் கும்பாபிஷேக கமிட்டியினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags

Next Story