தூத்துக்குடி : ஆவின் நிர்வாகம் சார்பில் நேரடியாக பால் விற்பனை

தூத்துக்குடி : ஆவின் நிர்வாகம் சார்பில் நேரடியாக பால் விற்பனை

ஆவின் பால் விநியோகம் 

தூத்துக்குடியில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதியில் ஆவின் நிர்வாகம் சார்பில் நேரடியாக பால் விற்பனை செய்யப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மழை விட்டு இரண்டு தினங்கள் ஆகியும் மழை நீர் இன்னும் வடியாத காரணத்தால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். குழந்தைகளுக்கு அத்தியாவசியமான பால் கிடைக்காமல் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் ஆவின் நிர்வாகம் சார்பில் நேரடியாக பொதுமக்களுக்கு பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஆவின் நிர்வாகம் சார்பில் நேரடியாக தூத்துக்குடிக்கு பால் கொண்டு வரப்பட்டு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

Tags

Next Story