ராஜீவ் காந்தி சிலையை உடைத்தவர்களை கைதுசெய்யவேண்டும்-மாணிக்கம் தாகூர்

ராஜீவ் காந்தி சிலையை உடைத்தவர்களை கைதுசெய்யவேண்டும்-மாணிக்கம் தாகூர்
நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் 

கன்னியாகுமரி மாவட்டத்தில் அருமநல்லூர் பகுதியில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி சிலையை உடைத்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது,கன்னியாகுமரி மாவட்டம், அருமநல்லூர் சந்திப்பில் முன்னாள் பிரதமரும், இந்தியாவை கணினிமாக்கியவருமான அன்புத் தலைவர் ராஜீவ் காந்தியின் சிலை அமைக்கப்பட்டு இருந்தது.அந்தச்சிலை அப்பகுதி மக்களுக்கு குறிப்பாக காங்கிரஸ் பேரியக்கத் தொண்டர்களுக்கு உத்வேகத்தையும் நாட்டுப்பற்றையும் தந்து கொண்டிருந்தது அந்தச் சிலையை யாரோ சில மர்ம மனிதர்கள் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். இது மிகவும் கண்டனத்துக்குரியது அந்த பகுதி மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் காவல்துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்து சிலை உடைத்து சேதப்படுத்தியவர்களை விரைவில் கைது செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் வலியறுத்தினார்.

Tags

Next Story