வீட்டுமனைகளுக்கு அவகாசம் நீட்டிக்கப்படாது: அமைச்சர் முத்துசாமி

வீட்டுமனைகளுக்கு அவகாசம் நீட்டிக்கப்படாது: அமைச்சர் முத்துசாமி

செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்

2016 ஆண்டிற்கு முன்பு வரையிலான அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகளுக்கு அங்கீகாரம் பெற வழங்கப்பட்ட அவகாசம் நீட்டிக்கப்படாது அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அத்திக்கடவு-அவினாசி திட்டம் பவானிசாகர் அணையின் உபரிநீரை கொண்டு செயல்படுத்த தயாராக உள்ளோம்.

1045 குளங்களும் தண்ணீர் விட்டு சோதனை செய்து முடித்தும் பணிகள் நிறைவடைந்து விட்டன. போதிய அளவு தண்ணீர் வந்தவுடன் அனைத்து குளத்திற்கும் தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.

2016 ஆம் ஆண்டுக்கு முன்பு வீட்டு மனை அங்கீகாரம் பெறாமல் அமைக்கப்பட்ட வீட்டு மனைகளுக்கு அங்கீகாரம் பெற வரும் 29ஆம் தேதி இறுதி நாள் மீண்டும் நீட்டிக்க பட மாட்டாது என்றார் வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்பட்ட வீடுகள் திட்டமிடாமல் அவசரத்தில் கட்டப்பட்டதால்தான் பல்வேறு வீடுகள் விற்பனை செய்யப்படாமல் உள்ளது என்றார்.

Tags

Next Story