திருச்செந்தூர்‌ கோவிலில் பணியிடம்: பிப்.14 வரை விண்ணப்பிக்கலாம்

திருச்செந்தூர்‌ கோவிலில் பணியிடம்: பிப்.14 வரை விண்ணப்பிக்கலாம்

திருச்செந்தூர் 

திருச்செந்தூர்‌ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இளநிலை மின்‌ பொறியாளர்‌ பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 
தூத்துக்குடி மாவட்டம்‌, திருச்செந்தூர்‌ அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள இளநிலை மின்‌ பொறியாளர்‌ பணியிடத்துக்கு விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து மின்‌ பொறியியலில்‌ பட்டயப்படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.35900 - 113500/- ஊதியம் வழங்கப்பட உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்ப படிவது பூர்த்தி செய்து இணை ஆணையர்‌/செயல்‌ அலுவலர்‌, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்‌, திருச்செந்தூர்‌ - 628215, தூத்துக்குடி மாவட்டம்‌ என்ற முகவரிக்கு 14.02.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இணையதள முகவரி: கூடுதல் விவரங்களுக்கு https://tiruchendurmurugan.hrce.tn.gov.in/resources/docs/templescroll_doc/38271/3161/document_1.pdf என்ற இணையதள லிங்க்கைக் கிளிக் செய்து அறியலாம்.

Tags

Next Story