திருச்செந்தூா் கோயிலில் ரூ. 4.64 கோடி உண்டியல் வருவாய்!

திருச்செந்தூா் கோயிலில் ரூ. 4.64 கோடி உண்டியல் வருவாய்!

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை மூலம், ரூ.4.64 கோடி வருமானம் கிடைத்துள்ளது.

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை மூலம், ரூ.4.64 கோடி வருமானம் கிடைத்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் வருவாய் மாதந்தோறும் எண்ணப்படுகிறது. அதன்படி திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை உண்டியல் எண்ணிக்கை அறங்காவலா் குழுத்தலைவா் ரா.அருள்முருகன் தலைமையில் திருக்கோயில் வசந்த மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.

உண்டியல் எண்ணிக்கையில், ரூ. 4 கோடியே 64 லட்சத்து 92 ஆயிரத்து 542, தங்கம் 2,390 கிராம், வெள்ளி 51,000 கிராம், பித்தளை 2,22,000 கிராம், செம்பு 29,000 கிராம், தகரம் 5,500 கிராம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் 727-ம் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தது தெரியவந்தது. உண்டியல் எண்ணும் பணியில் சிவகாசி பதினெண் சித்தா் மடம் பீடம் குருகுல வேத பாடசாலை உழவாரபணிக்குழுவினா், தூத்துக்குடி ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சனேயா் உழவாரப் பணிக் குழுவினா் மற்றும் கோயில் பணியாளா்கள் ஈடுபட்டனா்.

Tags

Next Story