திருக்கடையூர் : எல்கை பந்தயத்தில் சீறி பாய்ந்த மாடுகள், குதிரைகள்

திருக்கடையூர் : எல்கை பந்தயத்தில் சீறி பாய்ந்த மாடுகள், குதிரைகள்

பரிசு வழங்கல் 

திருக்கடையூரில் நடந்த மாடு மற்றும் குதிரை வண்டிகளுக்கான எல்கை பந்தயத்தை பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் புகழ்பெற்ற மாடு மற்றும் குதிரை வண்டிகளுக்கான எல்கை பந்தயம் காணும் பொங்கலான நேற்று நடைபெற்றது சிறியமாடு, நடுமாடு, பெரிய மாடு வண்டிகளுக்கான பந்தயமும் அதேபோல் குதிரைகளுக்கான போட்டியில் புதுக் குதிரை, கரிச்சான்குதிரை, நடுகுதிரை, பெரிய குதிரைகளுக்கான பந்தயம் நடைபெற்றது. போட்டிகளில் காளைகளும் குதிரைகளும் சீறிப்பாய்ந்தன. சீறிப்பாய்ந்த குதிரை வண்டி பந்தயத்தை பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். நிறைவாக எல்கை பந்தயத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு கேடயங்களும் ரொக்க பரிசுகளும் வழங்கப்பட்டன. மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் பரிசுகளை வழங்கினார்.

Tags

Next Story