கூட்டணி குறித்து த.மா.கா., முடிவு?

கூட்டணி குறித்து த.மா.கா., முடிவு?

த.மா.கா., இளைஞரணி தலைவர் யுவராஜா

குறைந்தது இரண்டு தொகுதிகளில் த.மா.கா., போட்டியிடும் என இளைஞரணி தலைவர் யுவராஜா கூறினார்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் யுவராஜா இன்று ஊட்டியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வரும் மக்களவை தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட உள்ளது. குறைந்தது 2 தொகுதியில் போட்டியிட உள்ளோம். நாங்கள் இ.பி.எஸ்., உடன் நெருக்கமாக உள்ளோம். பழக்க வழக்கம் வேறு, தேர்தல் வேறு. நாங்கள் பெரும் களப்பணியாற்றி உள்ளோம். எங்களுடைய கோரிக்கை ஏற்று, எங்களை கண்ணியத்துடன் நடத்தும் கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம். வரும் மக்களவை தேர்தலில் மக்கள், பணத்துக்காக வாக்களிக்க கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story