டிஎம்பி வங்கி புதிய கிளைகள் திறப்பு

டிஎம்பி வங்கி புதிய கிளைகள் திறப்பு

TNSC BANK

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 557வது மற்றும் 558வது புதிய கிளைகள் விழுப்புரம் வளவனூர் மற்றும் தெலுங்கானா நிசாமாபாத்தில் இன்று திறப்பு விழா நடைபெற்றது.

தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ஒரு தலை சிறந்த ஷெட்யூல்டு கமர்சியல் வங்கி, பங்கு சந்தைகளில் தனது பங்கினை பட்டியலிட்டதை அடுத்து தனது தொலைநோக்கு பார்வையாக மீண்டும் இந்தியா முழுவதுமான விரிவாக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், ATM வசதியுடன் வங்கியின் 557வது மற்றும் 558வது கிளைகள் திறப்பு விழா இன்று நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் வளவனூரில் 557வது கிளையை தொழிலதிபர் மற்றும் நிலக்கிழார் சுரேஷ் திறந்து வைத்தார்.

தெலுங்கானா மாநிலம் நிசாமாபாத்தில் 558வது கிளையை நிசாமாபாத் சேம்பர் தலைவர் ஜெகதீஸ்வர் ராவ் திறந்து வைத்தார். விழாவில் வங்கியின் மண்டல மேலாளர், ஊழியர்கள், அலுவலர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு இந்த திறப்பு விழாவினை சிறப்பித்தார்.

Tags

Read MoreRead Less
Next Story