9ம் தேதி தமிழ்நாடு முழுவதும் வணிகர்கள் ஆர்ப்பாட்டம்: விக்ரமராஜா

9ம் தேதி தமிழ்நாடு முழுவதும் வணிகர்கள் ஆர்ப்பாட்டம்: விக்ரமராஜா

விக்கிரமராஜா

வணிகர்களை சோதனை என்ற பெயரில் தொந்தரவு செய்வதை முறைபடுத்தாவிட்டால் 9ம் தேதி தமிழ்நாடு முழுவதும் வணிகர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று விக்ரமராஜா தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார். அதில் வணிகர்கள் கையில் 2000 ஆயிரம் ரூபாய் கூட எடுத்து செல்ல முடியாத நிலை தற்போது உள்ளதாகவும்,

சோதனை என்ற பெயரில் பறிமுதல் செய்யும் பொருட்கள் மீண்டும் ஆவணம் கொடுத்தாலும் கொடுக்காத நிலையும், 2 லட்சம் ரூபாய் வரை பணம் கையில் வைத்துகொள்ள அனுமதி வழங்க வேண்டுமென்றும், இதே நிலை தொடர்ந்தால் தேர்தல் முடியும் வரை வணிகர்கள் கடை அடைக்கும் நிலையை தவிர்த்து வேறு வழியில்லை என்று மனுவில் தெரிவித்துள்ளனர்.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, தலைமை தேர்தல் அதிகாரி வணிகர்கள் பாதிக்காத வகையில் அனைத்து மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பிப்பதாக கூறியுள்ளார் அப்படி நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் வரும் 9ம் தேதி தமிழகம் முழுவதும் வணிகர்கள் ஆர்பாட்டம் நடத்துவார்கள் என கூறினார்.

Tags

Next Story