நெமிலியில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு!

நெமிலியில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு!

ஹெல்மெட் அணிய வலியுறுத்தல்

நெமிலி பகுதியில் வாகன ஓட்டிகளுக்கு மோட்டார் வாகன ஆய்வாளர் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியில் பாணாவரம் செல்லும் சாலையில் வாகன ஓட்டிகளுக்கு சாலை போக்குவரத்து குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மோட்டார் வாகன ஆய்வாளர் செங்கோட்டுவேல் தலைமை தாங்கி பேசுகையில், "இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் வைத் திருக்க வேண்டும். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது. மோட்டார் சைக்கிளில் 2-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்யக்கூடாது. வேகமாக செல்ல கூடாது. மோட்டார் வாகன ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் வாகனம் பறிமுதல் செய்யப்படும்," என்று கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Tags

Read MoreRead Less
Next Story