கடனை திருப்பி செலுத்த முடியாததால் விபரீதம் - குடும்பத்தோடு தற்கொலை முயற்சி

கடனை திருப்பி செலுத்த முடியாததால் விபரீதம் - குடும்பத்தோடு  தற்கொலை முயற்சி

ரமேஷ்குமார்

சிவகாசியில் உறவினர்களிடம் வாங்கிய நகை மற்றும் பணத்தை திருப்பித் தர முடியாததால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள பழனியாண்டவர்புரம் காலனியை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (வயது 57). இவர் சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் பெட்டிக்கடை நடத்தி வந்தார். இவருக்கு பாமா (45) என்ற மனைவியும், பாலாஜிகிஷோர் (23) என்ற மகனும், ஜெயதர்ஷினி (18) என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் ரமேஷ் குமார் தனது குடும்ப செலவுக்கும், மகன், மகள் படிப்பு செலவுக்கும் போதிய பணம் இல்லாமல் அவதி அடைந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் நகை, பணம் ஆகியவற்றை கடனாக வாங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலை யில் நகைகள் மற்றும் ரொக்கம் கடனாக கொடுத்தவர்கள் திருப்பி கேட்டுள்ளனர். தற்போது போதிய வசதி இல்லாத நிலையில் கடன் வாங்கியவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் ரமேஷ் குமார் திணறி வந்துள்ளார். இந்த நிலையில் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள போவதாக ரமேஷ்குமார் தகவல் அளித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த சிவகாசி கிழக்கு காவல்நிலைய போலீசார் வீட்டிற்கு செல்வதற்குள் ரமேஷ்குமார், அவரது மனைவி பாமா, மகன் பாலாஜி கிஷோர், மகள் ஜெயதர்ஷினி ஆகியோர் விஷத்தை குடித்துவிட்டதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு சென்ற போலீசார் 4 பேரையும் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் சிவகாசியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story