திருச்சி : மலக்குடலில் மறைத்து எடுத்து வரப்பட்ட தங்கம் பறிமுதல்

திருச்சி :  மலக்குடலில் மறைத்து எடுத்து வரப்பட்ட தங்கம் பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் 

துபாயிலிருந்து திருச்சி விமான நிலையம் வந்த பயணியின் மலக்குடலில் மறைத்து எடுத்து வரப்பட்ட ரூ.ரூ.74.91 லட்சம் மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு அதிக அளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் அதிக அளவில் பயணம் செய்யும் பயணிகள் தங்கத்தை மறைத்து எடுத்து வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக குறைந்து இருந்த தங்கம் கடத்தல் மீண்டும் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து துபாயிலிருந்து திருச்சிக்கு வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஆண் பயணி ஒருவரிடம் நடத்திய சோதனையில் அவரது மலக்குடலில் மறைத்து வைத்திருந்த பேஸ்ட் வடிவிலான ரூ.74,91,190/- மதிப்புள்ள 1039 கிராம் 24 கேரட் தூய்மையான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags

Next Story