திருச்சி: சவுக்கு சங்கா் மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு

திருச்சி:  சவுக்கு சங்கா் மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு

பைல் படம் 

பெண் காவலா்களைப் பற்றி சா்ச்சைக்குரிய வீடியோ வெளியிட்டது தொடா்பாக யூடியூபா் சவுக்கு சங்கா் மீது திருச்சி மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்துள்ளனா்.
முசிறி உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளா் எம்.ஏ. யாஸ்மின் அளித்த புகாரில் சவுக்கு சங்கரின் விடியோவால் மிகுந்த மனஅழுத்தத்துக்கு ஆளானதாகத் தெரிவித்தாா். அதன்பேரில் திருச்சி மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் 4 பிரிவுகளின் கீழ் சவுக்கு சங்கா், அவருக்குத் தூண்டுதலாக இருந்த பெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். மேலும் திருச்சி மாவட்ட கணினிசாா் குற்றப்பிரிவு ஏடிஎஸ்பி கோடிலிங்கம் தலைமையிலான போலீஸாா் இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவு பெற்று, கோவை மத்திய சிறையிலுள்ள சவுக்கு சங்கரை நேற்று சம்பிரதாயக் கைது செய்தனா். சவுக்கு சங்கா் மீது மாநகர போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்த நிலையில் சைபா் கிரைம் போலீஸில் இந்த வழக்குப் பதியப்பட்டுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story