மில்டன் மழலையர் பள்ளியில் முப்பெரும் விழா!

மில்டன் மழலையர் பள்ளியில் முப்பெரும் விழா!

மில்டன் மழலையர் பள்ளி

கே வி குப்பம் அருகே உள்ள தனியார் மழலையர் பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே வடுகந்தாங்கல் மில்டன் மழலையர் தொடக்கப் பள்ளியில் விளையாட்டு தினவிழா, மழலையர் பட்டமளிப்பு விழா, பரிசளிப்பு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. பள்ளி தாளாளர் டாக்டர் கே.சி.முரளி தலைமை தாங்கினார். முதல்வர் சி.அம்சா முன்னிலை வகித்தார். நிகழ்வில் திருக்குறள் ஒப்பவித்தல், நினைவாற்றல், வினாடி-வினா உள்ளிட்ட பல்வேறு போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. சிறப்பு அழைப்பாளராக, ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி ஜெயபால் கலந்துகொண்டு மழலைகளுக்கு பட்டங்களையும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

Tags

Next Story