கஞ்சா வைத்திருந்த லாரி ஓட்டுநர் கைது!

குடியாத்தம் அருகே கஞ்சா வைத்திருந்த டிரைவருடன், லாரியை பறிமுதல் செய்து பரதராமி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் பரதராமி போலீசார் தமிழக ஆந்திர எல்லையில் உள்ள பரதராமி சோதனை சாவடியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது கொல்கத்தாவில் இருந்து கோவைக்கு இரும்பு பைப்புகளை ஏற்றி வந்த வேகமாக வந்த லாரியை மடக்கி சோதனை செய்தனர். அப்போது, 200 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து லாரியை ஓட்டி வந்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஓட்டுநர் வலம்புரி (40) என்பவரை கைது செய்த பரதராமி போலீசார் 200 கிராம் கஞ்சாவையும் லாரியையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story