தூத்துக்குடி வேட்பாளர் கனிமொழி பிரச்சாரம்

தூத்துக்குடி வேட்பாளர் கனிமொழி பிரச்சாரம்

தூத்துக்குடி வேட்பாளர் கனிமொழி பிரச்சாரம்

தூத்துக்குடி பாராளுமன்ற திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டார்.

தமிழ்நாட்டில் ஏப்ரல்-19ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி, தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளான இன்று ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி புதுக்கோட்டை ஊராட்சியில் பொதுமக்களிடம் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, இந்தியா கூட்டணி சார்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி கருணாநிதி,

நிறைய கஷ்டப்பட்டு எத்தனை பேர் உயிரிழந்து, சிறைக்குச் சென்று ஆங்கிலேயர்கள் கிட்ட இருந்து நாம் விடுதலை வாங்கி இருக்கிறோம். இன்றைக்கும் மறுபடியும் ஒரு அடக்குமுறை ஆட்சி ஒன்றியத்தில் நடந்து கொண்டிருக்கிறது. போராடக்கூடிய உரிமை மக்களுக்கு கிடையாது, அரசாங்கத்தைக் குற்றம் சொல்லக் கூடிய உரிமை பத்திரிக்கை ஊடகத்திற்கு கிடையாது, எதிர்க்கட்சிகள் மோடியை அவருடைய ஆட்சியில் இருக்கக் கூடிய குறைகளை எடுத்துச் சொல்லக் கூடாது, யார் இதைச் சொன்னாலும் சிறைக்கு அனுப்பப்படுகிறார்கள்.

இரண்டு முதலமைச்சர்கள் இன்றைக்கு சிறையில் இருக்கிறார்கள், ஒரு துணை முதலமைச்சர், நிறைய எதிர்க்கட்சித் தலைவர்கள் இவர்களெல்லாம் மோடி பக்கம் போய் விட்டால் சுத்தமாய் விடுகிறார்கள், எதிர்த்து நின்றால் சிறைச்சாலை. மோடி ஆட்சிக்கு வரமாட்டார், ஒருவேளை விபத்து நடந்து ஆட்சிக்கு வந்தால், இதுதான் நம்முடைய கடைசித் தேர்தல், ஜனநாயகம் இருக்காது, சர்வாதிகாரம் மட்டும் தான் இந்த நாட்டில் மிஞ்சும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

மன்னர் ஆட்சியை கூட கிடையாது, சர்வாதிகார ஆட்சி தான். மோடி மக்களுக்கு கடந்த 10 ஆண்டுகளில் எந்த வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை. இப்படி வெயில் நாம் கஷ்டப்படுகிறோம், அதே போன்று தான் இந்த ஆட்சியும் பத்து வருஷம் சுட்டெரிக்க கூடிய ஆட்சி மக்களை வாட்டி வதைக்கக்கூடிய ஆட்சி. ஆனால் நம்முடைய ஆட்சி நம்முடைய முதலமைச்சர் மக்களுக்கான திட்டங்களை வாக்குறுதிகளை நிறைவேற்றித் தரக்கூடியவர். நமது முதலமைச்சர் ஆயிரம் ரூபாய் கலைஞர் உரிமைத்தொகை கொடுக்கிறேன் என்று சொன்னார், இன்றைக்கு ஒரு கோடி 15 லட்சம் சகோதரிகளுக்குத் தமிழ்நாட்டில் வழங்கப்படுகிறது.

சில பேருக்கு விடுபட்டுள்ளது அவர்களுக்குத் தேர்தல் முடிந்த பின்பு இன்னொரு முகாம் அமைத்துக் வழங்கப்படும். கேஸ் சிலிண்டர் மானியம் கொடுக்கிறேன் என்று பாஜக கூறினார், ஆனால் கொடுக்கவில்லை. இன்றைக்கு கேஸ் சிலிண்டர் விலை 1100, நமது இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் கேஸ் சிலை 500 ரூபாய். பெட்ரோல் 75 ரூபாய், டீசல் 65 ரூபாய்க்கு கொடுக்கப்படும். அதேபோல் உங்கள் பேங்க் அக்கவுண்ட்ல காசு குறைவான பிடித்து விடுகிறார்கள் அது நிறுத்தப்படும். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் சொல்லி இருக்கிறார்கள்,

ஏழ்மையில் உள்ள ஒரு பெண்ணுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூபாய் ஒரு லட்சம் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்கள் நமது முதலமைச்சர் செல்வது போல் இரண்டாவது சுதந்திரப் போராட்டம் என்ற உணர்வோடு இந்த தேர்தலில் வாக்களிக்க, உங்களை எல்லாம் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். கொரோனா வந்தபோது மோடி வீடுகளில் தட்டை தட்டச் சொன்னார், வைத்தியம் பார்க்கவில்லை, மருந்து மாத்திரை கொடுக்கவில்லை. பாஜக ஆட்சியிலிருந்து ஓடுவதற்கு நாம் தட்டை தட்ட வேண்டும். வரக்கூடிய தேர்தலிலே தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

Tags

Next Story