கண்காணிப்பு குழுவில் உள்ள போலீசாருக்கு இரண்டு நாள் பயிற்சி நிறைவு!

வேலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவில் பணிபுரியும் போலீசாருக்கு இரண்டு நாள் பயிற்சி நடைபெற்றது.

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிக்கும் தலா 3 பறக்கும் படைகள் மற்றும் 3 நிலை குழுக்கள் வீதம் 30 குழுக்கல் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை ஆகிய இரு தினங்கள் பறக்கும் படை மற்றும் நிலை குழுக்களில் பணியில் ஈடுபடும் போலீசாருக்கு, சோதனையின் போது என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பயிற்சி நடத்தப்பட்டது.

இரண்டாவது நாள் பயிற்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் கலந்து கொண்டு போலீசாருக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். அப்போது கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் பாஸ்கரன், கோடீஸ்வரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story