பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு இரண்டு நாட்கள் நீட்டிப்பு.

பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு இரண்டு நாட்கள் நீட்டிப்பு.

பைல் படம் 

தமிழ்நாடு மாணவர் பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு நாளை வரை நீட்டிக்கப்படுகிறது.
2024-25 ஆம் கல்வி ஆண்டிற்கான பொறியியல் மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு மே 6ஆம் தேதி முதல் ஜூன் 6 ஆம் தேதி வரை நடைபெற்றது. அதில் 2,49,918 மாணாக்கர்கள் விண்ணப்பப் பதிவு செய்துள்ளனர் மற்றும் 2,06,012 மாணாக்கர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனர். தற்பொழுது மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்று தமிழ்நாடு மாணவர் பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு ஜூன் 10 மற்றும் 11 ஆகிய இரண்டு நாட்கள் மேலும் நீட்டிக்கப்படுகிறது. இதுவரை விண்ணப்பிக்க தவறிய மாணாக்கர்கள் புதிதாக விண்ணப்பத்தினை www.tneaonline.org என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்து, பதிவு கட்டணம் செலுத்தி, தங்களது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என்று தொழில்நுட்ப கல்வி ஆணையர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story