தூய்மை பணியாளர் மீது மோதிய டூவீலர் - பரபரப்பு சிசிடிவி காட்சி!

சத்துவாச்சாரி பகுதியில் தூய்மை பணியாளர் மீது டூவீலர் மோதிவிட்டு நிற்காமல் சென்ற சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாநகர் சத்துவாச்சாரி மந்தவெளி தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி எதிரே தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் மீது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் மோதியதில் தூய்மை பணியாளர் விஜயலட்சுமி கால் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சத்துவாச்சாரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருசக்கர வாகனத்தில் வந்த நபர் வேகமாக மோதியதில் அந்தப் பெண்மணி தூக்கி வீசப்பட்டுள்ளார். இதனை பார்த்த இருசக்கர வாகனத்தில் வந்த அந்த நபர் இடித்ததோடு மட்டுமில்லாமல் கீழே விழுந்த பெண்மணிக்கு என்ன ஆனது என்று கூட கண்டுகொள்ளாமல் மிக அலட்சியமாக சென்றுள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story