இரு சக்கர வாகனத்தை திருடியவர் கைது

இரு சக்கர வாகனத்தை திருடியவர் கைது

இரு சக்கர வாகனத்தை திருடியவர் கைது

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே இரு சக்கர வாகனத்தை திருடியவர் போலீசார் கைது செய்தனர்.

அரியலூர் மாவட்டம்,மீன்சுருட்டி அருகே சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை திருடியவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். மீன்சுருட்டி அருகேயுள்ள இறவாங்குடி, நடுத்தெருவைச் சேர்ந்தவர் அன்பழகன் (53). விவசாயியான இவர், வெள்ளிக்கிழமை காலை சாலையோரத்தில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வயலுக்குச் சென்றார். அப்போது இவரது இரு சக்கர வாகனத்தை அந்த வழியாக வந்த ஒருவர் திருடிச் சென்றதைக் கண்ட அன்பழகன் கூச்சலிட்டுள்ளார்.

இதனை கண்ட பொதுமக்கள் அந்த நபரை மடக்கி பிடித்து மீன்சுருட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் அவர், கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் அருகே மாமங்கலம், காலனித் தெருவைச் சேர்ந்த பழனிவேல் மகன் வீரமணி (34) என்பது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.

Tags

Next Story