உதயநிதி ஸ்டாலினை பிரச்சாரம் செய்வதிலிருந்து நீக்க வேண்டும்: அதிமுக வழக்கறிஞர்

உதயநிதி ஸ்டாலினை பிரச்சாரம் செய்வதிலிருந்து நீக்க வேண்டும்: அதிமுக வழக்கறிஞர்

இன்பதுரை 

உதயநிதி ஸ்டாலினை பிரச்சாரம் செய்வதில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடலூர் பிரச்சாரத்தில் எதிர்கட்சிகளை சிறுமைப்படுத்தும் விதமாக பேசி உள்ளார், பிரிந்து நிற்பவர்களை பிஞ்ச செருப்பால் அடிக்க வேண்டும் என அமைச்சரே பேசி உள்ளார்.

இது தேர்தல் நடைமுறைக்கு எதிரானது. இது இரண்டு கட்சிகளை சேர்ந்தவர்களுக்கு இடையே பிரச்சனையை ஏற்படுத்தும் இவ்வாறு உதயநிதி பேசியது தவறு, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்வதில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும்,

உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மாநிலத்தின் அமைச்சர் இவ்வாறு பேசுவது தவறு, அந்த இடத்தில் ஒரு பதட்டமான சுழலை ஏற்படுத்தும். முதல்வரின் மகன் என்ற ஆணவத்தில் நாக்கு தடித்து பேசுகிறார் அவரை பேச அனுமதிக்க கூடாது.

Tags

Next Story