ஒன்றியக்குழு சாதாரண கூட்டம்

கூட்டத்தில் 30 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
ரிஷிவந்தியம் அடுத்த பகண்டைகூட்ரோட்டில் நடந்த ஒன்றியக்குழு சாதாரண கூட்டத்திற்கு, சேர்மன் வடிவுக்கரசி சாமிசுப்ரமணியன் தலைமை தாங்கினார். பி.டி.ஓ.,க்கள் ரங்கராஜன், சவுரிராஜன் முன்னிலை வகித்தனர். துணை பி.டி.ஓ., தினகர்பாபு வரவேற்றார். உதவியாளர் பிரபாகரன் மன்றப்பொருள் வாசித்தார். கூட்டத்தில், கிராமங்களில் நிறைவேற்றபட வேண்டிய வளர்ச்சி திட்ட பணிகள், அலுவலக செலவினங்கள், மழைக்காலத்தையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் உட்பட 30 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில், மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story