ராகுல்காந்தி நடைபயண நிறைவு விழாவில் வைகோ பங்கேற்பு

ராகுல்காந்தி நடைபயண நிறைவு விழாவில் வைகோ பங்கேற்பு

வைகோ

மும்பையில் நடைபெறும் ராகுல்காந்தி நடைபயண நிறைவு விழாவில் வைகோ பங்கேற்பு.
ராகுல்காந்தி தனது இந்திய ஒற்றுமை மற்றும் நீதி பயணத்தை கடந்த ஜனவரி மாதம் 14 ஆம் தேதி மணிப்பூரில் தொடங்கினார். இந்தியா முழுவதும் 15 மாநிலங்களை கடந்து 6,700 கிலோ மீட்டருக்கு மேல் தொடர்ந்த இந்த நடைபயணம் நடைபெற்றது. அதனுடைய நிறைவு விழா வரும் மார்ச் 17 ஆம் தேதி மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் ராகுல்காந்தி வெற்றிகரமாக நிறைவு செய்ய இருக்கிறார். இந்த நிகழ்விற்கு, இந்தியா கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த நிலையில் மதிமுக தலைவர் வைகோவிற்கு நடைபயண நிறைவு விழாவில் பங்கேற்க காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே சார்பில் கடிதம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது அழைப்பை ஏற்றுக்கொண்டு வைகோ மும்பையில் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் இந்நிகழ்ச்சி அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், மாற்றத்திற்கான நிகழ்வாகவும் அமையும்.

Tags

Next Story