மதுரை கோரிப்பாளையத்தில் தேவர் சிலைக்கு வைகோ மரியாதை

மதுரை கோரிப்பாளையத்தில் தேவர் சிலைக்கு வைகோ மரியாதை

தேவர் சிலைக்கு வைகோ மாலை அணிவித்து மரியாதை 

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சுதந்திர போராட்ட தியாகி பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116 வது ஜெயந்தி விழா மற்றும் 61வது குருபூஜை விழாவை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருவுருவ சிலைக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தெப்பக்குளம் பகுதியில் உள்ள மாமன்னர் மருது சகோதரர்கள் திரு உருவ சிலைக்கு வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் இந்த நிகழ்வின் போது மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பூமிநாதன் மதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். தேவர் குருபூஜை முன்னிட்டு மதுரையில் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags

Next Story