வரதம்பாளையம் பத்திரகாளி அம்மன் குண்டம் திருவிழா

வரதம்பாளையம் பத்திரகாளி அம்மன் குண்டம்   திருவிழா
சத்தியமங்கலம், வரதம்பாளையம் பத்ரகாளியம்மன் குண்டம் திருவிழா மற்றும் மாரியம்மன் கோயில் கம்பம் விழா நடந்தது.

சத்தியமங்கலம், வரதம்பாளையம் பத்ரகாளியம்மன் குண்டம் திருவிழா மற்றும் மாரியம்மன் கோயில் கம்பம் விழாவையொட்டி, அம்மனுக்கு நாள் தோறும் சிறப்பு அலங்கார பூஜைகள் நடை பெற்று வருகின்றன. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், வரதம்பாளையம் பத்ரகாளியம்மன் கோயில், மாரியம்மன் கோயில், மாகாளியம்மன் கோயில் வகையறா கோயில்களில் கம்பம் மற்றும் குண்டம் விழா பூச்சாட்டலுடன் கடந்த 9-ஆம் தேதி தொடங்கியது.

விழாவையொட்டி, பத்ரகாளியம்மன்,மாரியம்மன், மாகாளியம்மனுக்கு நாள்தோறும் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்று வருகின்றன. மாரியம்மன் கோயில் முன் நடப்பட்டுள்ள கம்பம் முன் பக்தர்கள் நாள் தோறும் கம்பத்தாட்டம் ஆடி வருகின்றனர். 21-ஆம் தேதி சுவாமி அலங்காரமும், 23- ஆம் தேதி காலை குண்டம் இறங்குதல், மாவிளக்கு மற்றும் அன்று இரவு கம்பம் பிடுங்குதல் நடைபெற உள்ளது. 24-ஆம் தேதி சுவா மிக்கு புஷ்ப அலங்காரம், ஆராட்டு விழா நடைபெறவுள்ளது.

Tags

Next Story