வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு

வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

வேலூர் தந்தை பெரியார் அரசு என்ஜினியரிங் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் சுப்புலட்சுமி ஆய்வு செய்தார்.
தமிழகத்தில் கடந்த 19-ந் தேதி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது. வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் வேலூர் தந்தை பெரியார் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் எண்ணப்படுகிறது. இதையொட்டி வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் அடங்கி உள்ள வேலூர், குடியாத்தம், கே.வி.குப்பம், அணைக்கட்டு, ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தனித்தனியே எந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கலெக்டர் சுப்புலெட்சுமி,வாக்கு எண்ணும் மையத்தை பார்வையிட்டார். மேலும் அங்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையையும் பார்வையிட்டார்.

Tags

Read MoreRead Less
Next Story