புல்ஃபார்மில் இருக்கும் விஜய் - கொங்கு மங்கைக்கு பெரிய பொறுப்பா..!

புல்ஃபார்மில் இருக்கும் விஜய் - கொங்கு மங்கைக்கு பெரிய பொறுப்பா..!

மாநில செயலாளரை அறிவித்த நடிகர் விஜய்

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை அணி அறிவிப்பு.

தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், முதற்கட்டமாக தனது அணிக்கு கொங்கு மண்டலத்தை சேர்ந்த பெண்ணிற்கு மாநில பதவி வழங்கி கவுரப்படுத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், அரசியலுக்குள் நுழைந்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கிய விஜய், அடுத்தடுத்த பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற விஜய், 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலே தனது இலக்கு என அறிவித்தார்.

கட்சி அறிவிப்பை தொடர்ந்து மாநிலத்தில் தமிழக வெற்றிக் கழகத்தை பலப்படுத்துவது, புதிய உறுப்பினர்கள் சேர்க்கை உள்ளிட்ட பணிகள் தீவிரம் காட்டி வரும் விஜய், பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளை வரவழைத்து சந்திப்பு நடத்தினார். அதேநேரம், விஜய்யின் கட்சியை தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பிக்கும் பணிகளும், கட்சிக்கு சின்ன மற்றும் கொடி ஒதுக்கீடு செய்யும் பணிகளும் புஸ்ஸி ஆனந்த் மூலம் நடந்து வருகின்றன. இதற்கிடையே, கடந்த வாரம் பனையூரில் நடந்த கூட்டத்தில் விஜய் தரப்பில் உறுப்பினர்களை சந்தித்த புஸ்ஸி ஆனந்த், தமிழக வெற்றிக் கழகத்தில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்றும், அதிக உறுப்பினர்களை சேர்ப்பவர்களுக்கு கட்சியில் பொருப்புகள் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

தமிழ வெற்றிக் கழகத்தில் வார்டு வாரியாக புதிய உறுப்பினர்களை சேர்க்க புதிய செயலியை விஜய் அறிமுகப்படுத்த திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் பரவின. இந்த சூழலில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கான பிரிவை உருவாக்கியுள்ள விஜய் மாநில அளவில் முக்கிய பொறுப்புகளில் இரு பெண்களை நியமித்துள்ளார். முதற்கட்டமாக உறுப்பினர் சேர்க்கை அணியை உருவாக்கியுள்ள விஜய், மாநில அளவில் முதல் பொறுப்பில் கொங்கு மண்டலத்தை சேர்ந்த பெண்ணிற்கு மாநில செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விஜய் கையெழுத்துடன் வெளியான அறிவிப்பில், “தமிழக வெற்றிக் கழகத்தின் அடிப்படை கட்டமைப்புகளை வலுப்படுத்தி வருகின்றோம். இரண்டு கோடி உறுப்பினர்கள் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளோம். இதன் முதற்கட்டமாக, உறுப்பினர் சேர்க்கை அணியை உருவாக்கி உள்ளோம். மகளிர் தலைமையில் முதன் முதலாக உருவாக்கப்பட்டுள்ள இந்த அணியினர், கழக தோழர்களோடு இணைந்து மக்களுக்கு உதவி செய்வார்கள். அதன்படி உறுப்பினர் சேர்க்கை அணியின் மாநில செயலாளர் பொறுப்புக்கு விஜயலட்சுமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் நாமக்கல் மாவட்டம் குமாரசபாளையம் ஜெகேகே சுந்தரம் நகரை சேர்ந்தவர். அதேபோல் மாநில இணை செயலாளர் பொறுப்புக்கு எஸ்என் யாஸ்மின் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தாலகா, வடக்குத்து ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர்.

இந்த அணியின் மாநில பொருளாளராக வி சம்பத் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர். கோவை கணேஷ் லே-அவுட்டை சேர்ந்தவர். மேலும் மாநில துணை செயலாளராக மதுரை கருப்பாயூரணி தாலுகா ஓடைப்பட்டியை சேர்ந்த ஏ விஜய் அன்பன் கல்லணை தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த அணியின் மாநில துணை செயலாளர் பொறுப்புக்கு எம்எல் பிரபு நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகரை சேர்ந்தவர். மேலும் புதிய அணி, கழக உள்கட்டமைப்ப சார்ந்து விரைவில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாகவும், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர் சேர்க்கை அணி நிர்வாகிகளுக்கம் கழக தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.

கட்சி தொடங்கியதும் முக்கிய பொறுப்பில் பெண்ணிற்கு வாய்ப்பளித்த விஜய்யின் செயல் தமிழக அரசியலில் கவனத்தை ஈர்த்துள்ளது.

Tags

Next Story