தேமுதிக கட்சி அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் நாளை நல்லடக்கம் - தேமுதிக அறிவிப்பு

தேமுதிக கட்சி அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் நாளை நல்லடக்கம் - தேமுதிக அறிவிப்பு

விஜயகாந்த் உடல் நாளை நல்லடக்கம் 

சென்னையில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் விஜயகாந்தின் உடல் நாளை நல்லடக்கம் செய்யப்படும் என அவருடைய மைத்துநர் எல்.கே. சுதீஷ் அறிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் விஜயகாந்தின் உடல் நாளை நல்லடக்கம் செய்யப்படும் என அவருடைய மைத்துநர் எல்.கே. சுதீஷ் அறிவித்துள்ளார்.

இது குறித்து விஜயகாந்தின் மைத்துநர் எல்.கே.சுதீஷ் கூறியிருப்பதாவது: தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலை 6.10 மணிக்கு விஜயகாந்த் காலமானார். அவருடைய உடல் தேமுதிக அலுவலகத்தில் நாளை மாலை 4.45 மணிக்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறது என சுதீஷ் தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நிமோனியா (நுரையீரல் அழற்சி) காரணமாக அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு மருத்துவப் பணியாளர்களின் கடின முயற்சி இருந்தபோதிலும் காலமானார். இதையடுத்து அவருடைய உடல் ஆம்புலன்ஸ் வாகனத்தில் சாலிகிராமம் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில் சாலிகிராமத்தில் சில நிமிடங்கள் வைக்கப்பட்டிருந்த அவருடைய உடல் தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு கொண்டு வரப்படுகிறது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக விஜயகாந்த் உடல் வைக்கப்படுகிறது. இங்கு பொதுமக்கள், கட்சியினர் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுகிறார்கள். எனத் தெரிவித்துள்ளார்.


Tags

Next Story