விருதுநகர் : உளுந்தம் பருப்பு, துவரம் பருப்பு விலை தொடர் உயர்வு

விருதுநகர் : உளுந்தம் பருப்பு, துவரம் பருப்பு விலை தொடர் உயர்வு

பைல் படம் 

விருதுநகர் சந்தையில் குண்டூர் வத்தல், உளுந்தம் பருப்பு மற்றும் துவரம் பருப்பு ஆகியவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முண்டு வத்தல், மல்லி விலை சற்று குறைந்துள்ளது.

விருதுநகர் சந்தையில் வாரந்தோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியில் வெளியிடப்பட்டு வருகிறது.

அதன் விபரம் வருமாறு : முண்டு வத்தல் விலை கடந்த வாரம் ரூ.13ஆயிரம் முதல் 17 ஆயிரம் வரை விற்கப்பட்டது. இந்த வாரம் சந்தைக்கு வரத்து அதிகரித்த காரணத்தால் குவிண்டாலுக்கு ஆயிரம் ரூபாய் வரை குறைந்தது. எனவே, ஆரம்ப கட்ட விலை 12ஆயிரம் முதல் அதிகபட்ச விலை ரூ.16 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. மல்லி லயன் வகை 40 கிலோ கடந்த வாரம் ரூ. 3400 முதல் 3650 வரை விற்கப்பட்டது. இந்த வாரம் மூட்டைக்கு ரூ.100 குறைக்கப்பட்டு ரூ.3300 முதல் 3600 வரை விற்பனையாகிறது.

துவரம் பருப்பு புதுசு நாடு வகையானது கடந்த வாரம் ரூ.12ஆயிரம் என விற்கப்பட்டது. இந்த வாரம் குவிண்டாலுக்கு ரூ.500 உயர்த்தப்பட்டு மூட்டை ஒன்று ரூ.12,500 என விற்பனை செய்யப்படுகிறது. தொலி உளுந்தம் பருப்பு நாடு வகை கடந்த வாரம் 100 கிலோ ரூ.10,400 என விற்கப்பட்டு வந்த நிலையில் இந்த வாரம் குவிண்டாலுக்கு ரூ.100 உயர்வு ஏற்பட்டுள்ளது. எனவே, மூட்டை ஒன்று ரூ.10,500 என விற்கப்படுகிறது.

உளுந்து லையன் வகையானது கடந்த வாரம் ரூ.10,200 என விற்கப்பட்டது. இந்த வாரம் குவிண்டாலுக்கு ரூ.300 வரை உயர்ந்துள்ளது. எனவே, மூட்டை ஒன்று ரூ.10,500 என விற்பனையாகிறது. கடலை புண்ணாக்கு 100 கிலோ கடந்த வாரம் ரூ.5300 என விற்கப்பட்டது. இந்த வாரம் ரூ.200 உயர்ந்து தற்போது ரூ.5,500 என விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை பிற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. கடந்த வார விலையே நீடிக்கிறது.

Tags

Next Story