VVPAT ஒதுக்கீடு செய்யும் பணி!

VVPAT ஒதுக்கீடு செய்யும் பணி!

ராணிப்பேட்டையில் VVPAT 2ம் கட்டமாக கணினி குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி நடந்தது.


ராணிப்பேட்டையில் VVPAT 2ம் கட்டமாக கணினி குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி நடந்தது.
இராணிப்பேட்டை மாவட்டத்தில் வருகின்ற ஏப்ரல் 19 அன்று அரக்கோணம் பாராளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தேர்தல் பொது பார்வையாளர் சுனில்குமார் முன்னிலையில் இன்று (08.04.2024) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் வளர்மதி அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்கான 5 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்குசாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM), கட்டுபாட்டு இயந்திரங்கள் (CU) யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் இயந்திரங்களை (VVPAT) 2 ஆம் கட்டமாக கணினி குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் பணியினை அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மேற்கொண்டார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ந.சுரேஷ், நேர்முக உதவியாளர் (தேர்தல்),ராஜேந்திரன், ஆட்சியர் அலுவலக மேலாளர் பாபு. தேர்தல் வட்டாட்சியர் திரு.கணேசன் மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story