நீர்வளத்துறை திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும் - அமைச்சர் துரைமுருகன்

நீர்வளத்துறை திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும் - அமைச்சர் துரைமுருகன்

நீர்வளத்துறை ஆய்வு கூட்டம் 

நீர்வளத்துறையில் நடைபெற்று வரும் அனைத்து திட்டங்களையும் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தினார்.

நீர்வளத்துறையில் நடைபெற்று வரும் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் அமைச்சர் துரைமுருகன் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, கூடுதல் செயலாளர், சிறப்பு செயலாளர், அனைத்து மண்டல தலைமை பொறியாளர்கள், கண்காணிப்பு பொறியாளர்கள் , உயர் அதிகாரிகள், நீர்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் மாவட்டங்களில் நடைபெற்று வரும் நீர்வளத்துறை தொடர்பான பணிகளின் தற்போதைய நிலை, தொய்வாக நடைபெற்று வரும் பணிகளின் தற்போதைய நிலை மற்றும் அதற்கான காரணம்? அதற்கான தீர்வு குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் துரைமுருகன் கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து, நீர்வளத்துறையில் அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தினார். மேலும் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அறிவிக்க புதிய திட்டங்களை தயார் செய்து அதற்கான கருத்துருக்களை உடனடியாக சமர்ப்பிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Tags

Next Story