வெற்றியை இழந்திருக்கலாம் களத்தை இழக்கவில்லை- அன்புமணி

வெற்றியை இழந்திருக்கலாம் களத்தை இழக்கவில்லை-  அன்புமணி

அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாடு அரசியலில் பாமக பல சரிவுகளை சந்தித்தாலும், அவற்றில் இருந்து மீண்டு வந்திருக்கிறது. இப்போதும் அதே போல் மீண்டு வருவோம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களவை தேர்தலில் வெற்றி பெறாதது வருத்தம் அளித்தாலும், அதனால் ஏமாற்றதிமுக, அதிமுகமோ, கவலையோ அடைவதற்கு எதுவுமில்லை. இந்த தேர்தல் போரில் வெற்றியை இழந்திருக்கலாம்; ஆனால், களத்தை இழக்கவில்லை; களம் சாதகமாகவே இருக்கிறது. எங்கள் இலக்கு மக்களவை தேர்தல் அல்ல; 2026 சட்டப்பேரவைத் தேர்தல் தான் என்பதை தெளிவுபடுத்தியுள்ளோம். 2019ஆம் ஆண்டு தேர்தலை விட, இம்முறை ஆளும் கட்சியான திமுக 7% வாக்குகள் குறைவாக பெற்றிருக்கிறது. ஆண்ட கட்சியான அதிமுக, 2021 சட்டமன்ற தேர்தலில் பெற்ற வாக்குகளை விட 13% குறைவாக பெற்றிருக்கிறது'' என தெரிவித்துள்ளார்.

Tags

Next Story