ராணிப்பேட்டை : நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

ராணிப்பேட்டை : நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

நலத்திட்ட உதவிகள் 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தில் 1861 பயனாளிகளுக்கு 5 கோடியை 58 லட்சம் மதிப்பீட்டில் நலதிட்ட உதவிகளை அமைச்சர் காந்தி வழங்கினார்.

ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் நலதிட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில கைத்தறி மற்றும் துணினூல் துறை அமைச்சர் ஆர் காந்தி கலந்துக் கொண்டு 1807 பயனாளிகளுக்கு 1 கோடியை 93 லட்சம் மதிப்பீட்டிலான அரசு நலதிட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் உயர் கல்வி பயில 54 மாணவர்களுக்கு 3 கோடியை 63 லட்சம் கல்வி கடனை அமைச்சர் காந்தி வழங்கினார்.

முன்னதாக மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மகளிர் திட்டம் சார்பில் மகளிர் குழுக்கள் மூலம் மதி சிறுதானிய உணவு அங்காடியினை அமைச்சர் காந்தி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜே எல் ஈஸ்வரப்பன், மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், கோட்டாட்சியர் மனோன்மணி உட்பட தேர்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்துக் கொண்டனர்.

Tags

Next Story