வாட்ஸ் அப்பில் பதிவு வாலிபர் கைது

வாட்ஸ் அப்பில் பதிவு வாலிபர் கைது
ஊராட்சி மன்ற தலைவர் அளித்த புகாரில் இளைஞர் கைது செய்யப்பட்டார்
உளுந்துார்பேட்டை அருகே ஊராட்சி தலைவர் கணவர் கைது ஆனதை வாட்ஸ் ஆப்பில் பதிவிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். எறையூரைச் சேர்ந்தவர் அனுசுயா.ஊராட்சி தலைவர். இவரது கணவர் ஆரோக்கியராஜ், அதே பகுதியைச் சேர்ந்த ரெக்ஸ் என்பவரிடம் 89 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். பணத்தை திருப்பி கேட்ட தகராறில் கடன் கொடுத்தவரை தாக்கிய வழக்கில் ஆரோக்கியராஜ் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இது குறித்து எறையூர் பகுதியைச் சேர்ந்த கிறிஸ்தவராஜ், 24; வாட்ஸ் ஆப்பில் பதிவிட்டுள்ளார். இதனை அடுத்து வாட்ஸப் பதிவு குறித்து அனுசுயா கொடுத்த புகாரின்பேரில் எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்கு பதிந்து கிறிஸ்துவராஜை கைது செய்தனர்.

Tags

Next Story