மேம்பாலத்தில் வீலிங் - தவறி விழுந்து 2 இளைஞர்கள் உயிரிழப்பு

மேம்பாலத்தில் வீலிங் - தவறி விழுந்து 2 இளைஞர்கள் உயிரிழப்பு

விபத்து நடந்த மேம்பாலம் 

வேலூர் மாவட்டம் வேலூர் அருகே கஸ்பா பகுதியில் உள்ள மேம்பாலத்தில் இரு சக்கர வாகனத்தின் முன் சக்கரத்தை தூக்கி வீலீங் செய்த போது மேம்பாலத்திலிருந்து கீழே விழுந்து ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொருவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து வேலூர் தெற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்தில் விசாரித்த போது, அவர்கள் வேலூர் தொரப்பாடி பகுதியை சேர்ந்த பாலமுருகன், முத்துவேல் என தெரிய வந்தது. இருவருக்கும் 19 வயது என கூறப்படுகிறது. இவர்கள் இரண்டு பேரும் இருசக்கர வாகனத்தில் சென்றபோது முன் சக்கரத்தை தூக்கியபடி வீலிங் செய்து வாகனத்தை ஓட்டிய போது இந்த விபத்து ஏற்பட்டதாக அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து வேலூர் தெற்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story