கணவரை கொலை செய்த மனைவி கைது

கணவரை கொலை செய்த மனைவி கைது

கொலையான வாலிபர்


அரியலூர் மாவட்டம் வெண்மான்கொண்டான் கிராமத்திற்கு செல்லும் சாலையில் வனத்துறைக்கு சொந்தமான முந்திரி காடு உள்ளது. இங்கு மனித உடல் ஒன்று எரிந்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடையார்பாளையம் போலீசாருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் அரியலூர் மாவட்டம் வடகடல் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் சென்னையில் வேலை பார்த்து வந்துள்ளதாகவும், இந்நிலையில் சுரேஷின் மனைவி அனுபிரியாவிற்கும் அவரது உறவினரான சுரேஷ் என்பவருக்கும் கள்ளதொடர்பு இருந்து வந்துள்ளது.

இதனையறிந்த சுரேஷ், அனுபிரியாவை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அனுபிரியா, சென்னையில் இருந்த கணவரை சொந்த ஊருக்கு வரவழைத்து வேல்முருகனுடன் சேர்ந்து கொலை செய்துள்ளார். பின்னர் அவரை மூட்டையில் கட்டி வெண்மான் கொண்டான் சாலையிலுள்ள முந்திரிதோப்பில் பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொளுத்தி உள்ளது தெரியவந்தது. இதனையடுத்து அனுபிரியா மற்றும் வேல்முருகனை கைது செய்து இன்று உடையார்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags

Next Story