ஜெயங்கொண்டம் அருகே மனைவி மாயம் கணவர் போலீசில் புகார்

ஜெயங்கொண்டம் அருகே மனைவி மாயம் கணவர் போலீசில் புகார்

காவல்துறை விசாரணை


உடையார்பாளையம் அருகே காணாமல் போன மனைவியை கண்டுபிடித்து தரக்கோரி கணவர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அரியலூர், ஜூலை.7- அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தத்தனூர் பொட்டக்கொல்லை கிராமத்தை சேர்ந்த அறிவழகன் மனைவி மாலா தேவி (29) இவர் அப்பகுதியில் உள்ள மளிகை கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் காலையில் மளிகை கடைக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.பின்னர் உறவினர்கள் வீடுகள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.இது குறித்து உடையார்பாளையம் காவல் நிலையத்தில் மாலா தேவியின் கணவர் அறிவழகன் புகார் அளித்தார்.புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.

Tags

Next Story