பட்டியல் இனத்தவரை திமுக முதல்வர் ஆக்குமா? - எல் முருகன்

பட்டியல் இனத்தவரை திமுக முதல்வர்  ஆக்குமா? - எல் முருகன்

 மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் 

பட்டியலினதைச் சார்ந்தவரை திமுக முதலமைச்சர் ஆக்குமா? திமுகவின் தலைவராக்க முடியுமா?,சமூகநீதி என்பதை வாய்ச் சவடாலக, மக்களை ஏமாற்ற, ஓட்டுக்காக மட்டும் தான் திமுக பேசுகிறது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன், வெற்றி துரைசாமியின் மறைவுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அவரின் இல்லத்திற்கு நேரில் வந்து ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர், குலசேகரப்பட்டினத்தில் 1900 கோடிக்குமேல் செலவழித்து அமைக்கப்படும் இஸ்ரோ ஏவு தளம் அமைக்கும் போது, இப்படி செய்வது எந்த அளவுக்கு திமுகவிற்கு அறிவில்லை என்பதை இது காட்டுகிறது. விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா முதன்மையானவர்களாக இருந்துகொண்டிருகிறது. இந்த நேரத்தில் சீனாவின் கொடியை போடுவது திமுகவின் சில்லறை அரசியல் , இயலாமை, தேச துரோகம் ஆகியவற்றை காட்டுகிறது. தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் போதைப்பொருள் பரவியுள்ளது.

பல ஆண்டுகளாக பாஜக இதை சொல்லிக்கொண்டு இருக்கிறது. திமுக அதை கண்டுகொள்வதில்லை. அந்த கட்சியை சேர்ந்த நிர்வாகியே அதை கடத்தி இருக்கிறார். முழு சோதனையும் முடித்த பிறகுதான் திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும். இன்று கூட செய்தி சேகரிக்கச் சென்ற ஒளிப்பதிவாளரை திமுகவினர் தாக்கியுள்ளனர். போதைப் பொருள், டாஸ்மாக் ,கொலை, கொள்ளை, சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஆகிய பிரச்சினைகள் உள்ளது.

ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் செவிடன் காதில் ஊதிய சங்கு போல் திமுக உள்ளது. பிரதமர் மோடி இந்த தேர்தலில் 400 தொகுதிகளில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியமைப்பது நிச்சயம். இந்தியா முழுவதும் மக்கள் ஆதரவு உள்ளது. இந்தியா கூட்டணி எந்த மாநிலத்திலும் இல்லை. இந்தியா கூட்டணி ஊழலுக்கான கூட்டணி, குடும்பத்திற்கான கூட்டணி, இந்த நாட்டுக்கு எதிரான கூட்டணி. அந்தக் கூட்டணியை மக்கள் புறந்தள்ளுவார்கள். தமிழகத்தை பொறுத்தவரை திமுக என்றால் ஊழல். 2G வழக்கு விசாரணையில் உள்ளது, பல்வேறு அமைச்சர்கள் மேல் ஊழல் வழக்கு உள்ளது. விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

திமுகவில் கருணாநிதி அவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே பதவிக்கு வருவதைத் தான் குடும்ப அரசியல் என்று சொல்கிறோம். ஆனால், பாஜகவில் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள் பதவிக்கு வரமுடியும். பட்டியலினதைச் சார்ந்தவரை திமுக முதலமைச்சர் ஆக்குமா? திமுகவின் தலைவராக முடியுமா? சமூகநீதி என்பதை வாய்ச் சவடாலக, மக்களை ஏமாற்ற , ஓட்டுக்காக மட்டும் தான் திமுக பேசுகிறது. போலி திராவிட மாடல். ஸ்டாலின் , உதயநிதி ஸ்டாலின் யாராவது SC, ST விடுதிகளை சென்று பார்துள்ளர்களா? கிராமங்களில் இரட்டை சுடுகாடு உள்ளது. தோல்வியுற்ற திராவிட மாடல். அவர்களுக்கு இன்னும் இரண்டு மாதத்தில் மக்கள் சரியான பாடம் புகட்டி அவர்களை ஓரம் கட்டுவார்கள். பாஜக கூட்டணி 39 தொகுதிகளிலும் வெற்றி பெறும். ஸ்டாலினுக்கு , ஊழல் திமுகவுக்கு தான் தோல்வி பயம் என்று பேசினார்.

Tags

Next Story