சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பெண் ஒருவர் அத்துமீறி தீக்குளிக்க முயற்சித்தார். 

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பெண் ஒருவர் அத்துமீறி தீக்குளிக்க முயற்சித்தார்.
சேலம் மாவட்டம் மேட்டுக்காடு செல்லப் பிள்ளைகுட்டை பகுதியை சேர்ந்தவர் ஞானசேகர். இவரது மனைவி ஜெயக்கொடி. இவர் இன்று காலை கலெக்டர் அலுவலகம் வந்தார். அவர் திடீரென கலெக்டர் அலுவலகம் முன்பு மறைத்து வைத்திருந்த மண்எண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அவர் போலீசாரிடம் கூறுகையில் தனக்கு சொந்தமான நிலத்தை சிலர் போலி கிரயம் செய்ததாக ஓமலூர் சார் பதிவாளர் அவர்களிடம் பலமுறை புகார் கொடுத்தேன். ஆனால் கண்டு கொள்ளவில்லை. எனவே தனது பூர்வீக சொத்தை மீட்டு தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார். இதையடுத்து ஜெயக்கொடியை டவுன் போலீஸ் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story