தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை

தற்கொலை 

குடியாத்தம் அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் போஸ்பேட்டை கூடநகரம் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ஜீவா (41). தச்சுத் தொழிலாளி. இவரது மனைவி குணலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான்.இந்த நிலையில் நேற்று முன்தினம் குணலட்சுமி தனது மகனுடன் ஆந்திர மாநிலம் பலமநேர் அடுத்துள்ள சவுடேபல்லி பகுதியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார்.

தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு குணலட்சுமி கணவர் ஜீவாவை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் அவர் போனை எடுக்கவில்லை.இதனை தொடர்ந்து அக்கம் பக்கத்தினருக்கு குணலட்சுமி போன் செய்து கணவர் ஜீவா குறித்து கேட்டுள்ளார். இதை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் ஜீவாவின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டில் தூக்குப்போட்டு நிலையில் ஜீவா இறந்து கிடந்தார்.

இதுகுறித்து அவர்கள் குணலட்சுமிக்கு தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி உள்ளிட்ட போலீசார் விரைந்து சென்று ஜீவாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தற்கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது.இந்த சம்பவம் தொடர்பாக குணலட்சுமி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜீவாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story