கல்லூரிக்கு செல்லாததை கண்டித்த தந்தை, மகன் செய்த விபரீத செயல்!

கல்லூரிக்கு செல்லாததை கண்டித்த தந்தை, மகன் செய்த விபரீத செயல்!

கல்லூரி செல்லாததை தந்தை கண்டித்ததால் மகன் தற்கொலை

கல்லூரிக்கு செல்லாததை கண்டித்ததால் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

சங்கராபுரம் அடுத்த புதுபாலப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி மகன் சின்னையன். இவருக்கு திருமணமாகி 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். 2 மகள், ஒரு மகனுக்கு திருமணமாகி விட்டது.இளைய மகன் வீரமணி,20; வடசென்னிமலை அரசு கல்லுாரியில் வேதியியல் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன் தினம் காலை கல்லுரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்த வீரமணியை தந்தை கண்டித்துள்ளார். பின் கல்லுாரிக்கு சென்று மாலை வீடு திரும்பிய வீரமணி இரவு யாரிடமும் பேசாமல் சாப்பிட்டுவிட்டு இரவு மாடிக்கு துாங்க சென்றார்.

நேற்று காலை வீரமணி கீழே வராதாதல் மாடிக்கு சென்று பார்த்தபோது அங்கு அவர் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. உடனடியாக அவரை மீட்டு சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை எண்ணம் அல்லது மன அழுத்தம் ஏற்பட்டால் 9152987821 எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.

Tags

Next Story