மாற்றுத்திறனாளி பெண் கொலை: 10 ஆண்டுகள் சிறை

மாற்றுத்திறனாளி பெண் கொலை: 10 ஆண்டுகள் சிறை

கோப்பு படம்

நகைக்காக மாற்றுத்திறனாளி பெண்ணை கொலை செய்த பக்கத்து வீட்டு பெண்ணுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை, 10 ஆண்டுகள் சிறை தண்டனையாகக் குறைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஈரோட்டில் வீட்டில் தனியாக இருந்த மாற்றுத்திறனாளி பெண், வனிதாவின் நகைகளை திருட விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்ட விவகாரம் பக்கத்து வீட்டு பெண் சர்மிளா பேகத்திற்கு கோபி செட்டிப்பாளையம் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியதை எதிர்த்த மேல்முறையீடு வழக்கில் , நகைக்காக மாற்றுத்திறனாளி பெண்ணை கொலை செய்த பக்கத்து வீட்டு பெண்ணுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை, 10 ஆண்டுகள் சிறை தண்டனையாகக் குறைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நகைகளை திருடுவது மட்டுமே நோக்கம், கொலை செய்வது நோக்கமல்ல என பக்கத்து வீட்டு பெண் சர்மிளா பேகம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தண்டனை குறைத்து நீதிபதிகள் எம் எஸ் ரமேஷ், சுந்தரமோகன் அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story