பீர் பாட்டிலால் தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது

பீர் பாட்டிலால் தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது

பீர் பாட்டிலால் தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே குடிபோதையில் பீர் பாட்டிலால் தொழிலாளியை தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகில் உள்ள ஏரிக்குத்திமேட்டை சேர்ந்தவர் கபீர் (25), கூலித்தொழிலாளி. ஏரிக்குத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன் (55), கூலித்தொழிலாளி. 2 பேரும் சேர்ந்து ஏரிக்குத்திமேட்டில் மதுபானம் குடித்துக் கொண்டிருந்தனர். போதை தலைக்கேறியதும், 2 பேருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த கபீர், தான் வைத்திருந்த பீர் பாட்டிலால் ஓங்கி குணசேகரனை தாக்கினார். அதில் குணசேகரனின் இடது காதின் சவ்வு கிழிந்து படுகாயம் அடைந்தார். உடனடியாக அவர் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் குணசேகரன் கொடுத்த புகாரின் பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதுதொடர்பாக கபீர் கைது செய்யப்பட்டார்.

Tags

Next Story