செல்போன் பறித்த வாலிபர் கைது

செல்போன் பறித்த வாலிபர் கைது

செல்போன் பறித்த வாலிபர் கைது

வாலாஜா அருகே நடந்து சென்ற நபரிடம் செல்போன் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ரபீக் நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் வாலாஜாபேட்டை பூஜாரி பச்சையப்பன் கோவில் தெருவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்தவழியாக டூ வீலரில் வந்த வாலிபர் ஒருவர் அவரிடம் முகவரி விசாரிப்பது போல் பேசிக்கொண்டே திடீரென அவர் வைத்திருந்த செல்போனை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதுகுறித்து வாலாஜா காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் செல்போனை பறித்து சென்றது வாலாஜாவை அடுத்த சென்ன சமுத்திரம் கிராமத்தை சேர்ந்த நேதாஜி (25) என்பது தெரியவந்தது. பின்னர்,அவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து செல்போன் மற்றும் டூவீலரை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story