கன்னியாகுமரியில் படகில் சுற்றுலா பயணி திடீர் உயிரிழப்பு

கன்னியாகுமரியில் படகில் சுற்றுலா பயணி திடீர் உயிரிழப்பு
சிறுவன் பலி 
கன்னியாகுமரியில் சுற்றுலா பயணி நெஞ்சுவலியால் உயிரிழந்த சம்பவம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரியில் இன்று கேரள மாநிலம் காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த ஒரு குழுவினர் சுற்றுலா வந்தனர். அவர்களுடன் அதே பகுதியை சேர்ந்த அசோகன் (59) என்பவரும் வந்திருந்தார். அந்த குழுவினர் கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிடுவதற்காக படகில் ஏறினார்கள். படகு கடல் நடுவே சென்று கொண்டிருந்தபோது, அசோகனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.

உடனே நெஞ்சை குடித்துக் கொண்டு அவர் அலறி சுருண்டு விழுந்தார். இதை கண்ட மற்ற பயணிகள் கூச்சலிட்டனர். இதையடுத்து அசோகனுக்கு படகில் வைத்து முதலுதவி அளிக்கப்பட்டது. ஆனாலும் அசோகன் பரிதாபமாக உயிரிழந்தார். எனவே அந்தப் படகு விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்லாமல் படகு துறைக்கு மீண்டு வந்தது.

இது குறித்த தகவல் அறிந்ததும் கடலோர காவல் படையினர் அங்கு சென்று உயிரிழிந்த அசோகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கடலோர பாதுகாப்பு படை போலீஸ் சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Next Story