வெனிசுலா தங்க சுரங்கத்தில் 15 பேர் பலி !

வெனிசுலா தங்க சுரங்கத்தில் 15 பேர் பலி !

வெனிசுலா தங்க சுரங்கம் 

வெனிசுலா நாட்டில் அங்கோஸ்டுரா நகராட்சியில் புல்லா லோகா என்ற இடத்தில் சட்ட விரோதமாக தங்க சுரங்கங்கள் செயல்பட்டு வரும் நிலையில் அங்கு பணியாற்றி வரும் 15 பேர் பலியாகியுள்ளனர்.

வெனிசுலாவில் கடந்த 2016-ம் ஆண்டு,புதிய வருவாய் திட்டமாக, நாட்டின் நடுப்பகுதி முழுவதும் ஒரு பெரிய சுரங்க மேம்பாட்டு மண்டலத்தை அந்நாட்டு அரசாங்கம் நிறுவியது. இதையடுத்து தங்கம், வைரங்கள், தாமிரம் மற்றும் பிற கனிமங்களுக்கான சுரங்க நடவடிக்கைகள் தொடங்கின. இதனால் அந்த மண்டலத்திற்கு வெளியே சட்டவிரோத சுரங்கங்கள் பெருகின.

இதனையடுத்து வெனிசுலா அங்கோஸ்டுரா நகராட்சியில் புல்லா லோகா என்ற இடத்தில் சட்ட விரோதமாக இயங்கி வந்த திறந்தவெளி தங்கச் சுரங்கத்தில் தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். அப்போது தங்கச் சுரங்கத்தில் ஒரு பாதி இடிந்து விழுந்தது. விபத்து குறித்து தகவலறிந்த மீட்புப் படையினர் ஆற்றில் படகில் ஒரு மணி நேரம் பயணம் செய்த பிறகே செல்ல முடிந்தது. இதனால் மீட்புக் குழுவினர் உடனடியாக செல்ல முடியவில்லை. பின்னர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு சிலரை மீட்டனர். தங்கச் சுரங்கத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் 15 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்து இருந்தனர். இன்னும் சிலர் மண்ணில் புதைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Tags

Next Story